logo
புதுச்சேரியில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு

புதுச்சேரியில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு

26/Sep/2020 01:24:14

புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமை 5,032 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 439 பேரும், காரைக்காலில் 61 பேரும், ஏனாமில் 21 பேரும், மாஹேவில் 14 பேரும் என மொத்தம்  555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,032 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,875 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,452 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,205 ஆக அதிகரித்துள்ளது.                                         

        


Top