logo
இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு  அரசு மானியம் பெறலாம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு அரசு மானியம் பெறலாம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

01/Mar/2021 12:36:24

புதுக்கோட்டை,மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:  இயற்கை முறையில் இரசாயனங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன்மூலம் விளைவிக்கப்படும் விளை பொருள் களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.  

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கும் பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அவற்றின் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது. எனவே அதற்கான தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. 

தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ் மத்திய அரசின் வா;த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம்  அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுவதால் இந்த தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருள்களை  வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

அங்ககச்சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின்  பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம்துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள்.

நில ஆவணம், பட்டா சிட்டா, நிரந்தர கணக்கு எண் (PAN CARD) அட்டை  நகல் , ஆதார்அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி  புதுக்கோட்டை  மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

அங்ககச்சான்றளிப்பிற்கு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளைபொருள்களை பதன் செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக்கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.2,700 எனவும், பிற விவசாயிகளுக்கு  வருடத்திற்கு ரூ.3,200 எனவும், குழு பதிவிற்கு ரூ.7,200 எனவும், பெரு வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,200  எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்  மையை ஊக்குவிக்கும் விதமாக  இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கீரை வகைகளுக்கு எக்டேருக்கு ரூ.2,500 -ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.3,750 ம் வழங்கப்பட்டு வருகிறது.  இயற்கை முறையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விவங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.

Top