logo
விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கொமதேக ஆர்ப்பாட்டம்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கொமதேக ஆர்ப்பாட்டம்

09/Jan/2021 07:19:28

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் விவசாய விரோத வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்பாட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தலைமை வகித்தார். 

 ஆர்ப்பாட்டத்தின் போது ,விவசாய விரோத வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்துவதை நிறுத்த வேண்டும், விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி   மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை  எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் , பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Top