23/Sep/2020 12:54:31
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, புதுக்கோட்டை எஸ்.ஆர். தொழில் நிறுவனங்களின் பங்களிப்போடு, புதுக்கோட்டை" மரம் நண்பர்கள்" சார்பில் புதுக்கோட்டை உசிலங்குளம் பேரறிஞர் அண்ணா நினைவு நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் (23.09.2020) மரக்கன்றுகள் நடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலைமை ஆசிரியை சாந்தி மீனான், இடைநிலை ஆசிரியை குழந்தை தெரசம்மாள், மரம் நண்பர்கள் பேராசிரியர்சா.விஸ்வநாதன், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் மெஸ் மூர்த்தி, பழனியப்பா கண்ணன், ஸ்டார் மொபைல் ராசு, பொறியாளர் ரியாஸ்கான், காந்திநகர் நண்பர்கள், ஒய்வு பெற்ற வங்கி அலுவலர் குட்டிசாமி, தாமரைச்செல்வன், சந்துரு ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.எட்வின், ஆசிரியை குழந்தை தெரசம்மாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர் இதையொட்டி 55 மரக்கன்றுகள் நடப்பட்டன்.