logo
அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா

05/Dec/2020 02:54:02

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பல நாடுகள் தொற்றிலிருந்து மீண்டு வரும் சூழலில் 2-ஆவது அலை பாதிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உலகிலேயே அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1.47 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளதாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

 கடந்த டிசம்பர் 3ம் தேதி 2.2 லட்சம் பேர் பாதிப்படைந்து, 2,921 பேர் பலியாகினர். நேற்று 2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2,506 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 35 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரேகான், அயோவா, வாஷிங்டன் மற்றும் டென்னசி ஆகிய மாநிலங்களில் தினசரி இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளன.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்ட் கூறும் போது, பிப்ரவரி மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டும் இந்த குளிர்காலம் இந்த நாட்டின் பொது சுகாதார வரலாற்றில் மிகவும் கடினமான நேரம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Top