logo

தமிழகம்–ஆந்திரம் இடையே நவ. 25 -ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடக்கம்

22/Nov/2020 04:57:15

சென்னை: தமிழகம்–ஆந்திரம்  இடையே பேருந்து போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா அதிக அளவில் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை முகாம்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து தமிழகம்–ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வருகிற 25-ஆம் தேதி முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே பயணிக்க இ–பாஸ்  தேவை இல்லை என்று தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார். தற்போது ஆந்திர மாநிலத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடங்க இருப்பதால் பயணிகள் முன் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


                                                   

        


Top