logo
ரயான் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில்  விசைத்தறி உரிமையாளர்கள்  போராட்டம்

ரயான் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்

11/Feb/2021 07:52:01

ஈரோடு, பிப்:  ஈரோட்டில் ரயான் நூல் விலை உயர்வை கண்டித்து வியாழக்கிழமை முதல் 11 நாட்களுக்கு ரயான் துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு ,சித்தோடு ,லக்காபுரம் போன்ற பகுதிகளில் 30 ஆயிரம் விசைத்தறிகளில்  ரயான் துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் ரயான் நூல் வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.60 வரை விலை உயர்ந்ததால் இவர்கள் உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு  கட்டுபடியான  விலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர் .

உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளுக்கு மீட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 4.50 பைசா வரை நஷ்டம் ஏற்பட்டது. எனவே நஷ்டத்தை சமாளிப்பதற்காக  புதன்கிழமை(11.2.2021)  முதல் வருகிற 21-ஆம் தேதி வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை  விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த ரயான் துணி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் நாள்  ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி மற்றும் ரூ. 7 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Top