logo
கீரமங்கலம் அருகே லாரி மோதி ஒருவர் சாவு.

கீரமங்கலம் அருகே லாரி மோதி ஒருவர் சாவு.

17/May/2020 11:00:46

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எம். அண்ணதாசன்(40).இவர், ஆவுடையார்கோவிலை சேர்ந்த கா.முருகையனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் அறந்தாங்கி சென்றுள்ளனர்.

 கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது,பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அண்ணதாசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.பலத்த காயமடைந்த முருகையன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த சா.தென்னவனை (40)கைது செய்துள்ளனர்.

Top