logo
விவசாயிகளிடமிருந்து நிலமெடுப்புக்கு போதிய நிவாரணத்தொகை வழங்கக் கோரிக்கை

விவசாயிகளிடமிருந்து நிலமெடுப்புக்கு போதிய நிவாரணத்தொகை வழங்கக் கோரிக்கை

04/Nov/2020 09:33:44

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாலை (4.11.2020 )   நடைபெற்ற ஆலோசனையின்போது  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களையும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்களையும்  நேரில் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி விவசாயி ஜி.எஸ். தனபதி,  காவிரி உபரிநீர் இணைப்பு விவசாயிகளிடமிருந்து நிலமெடுப்பு பணிகள் அவர்களுக்கு உரிய போதிய நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் மாவட்ட விவசாயிகளின் வருவாய்த்துறை சம்பந்தமான பட்டா மாறுதல்கள்,  நிலபரிவர்த்தனைகள், பூர்வீக சொத்துக்களின் வாரிசு பெயர் மாற்றம் செய்வதன் அவசர அவசியம் பற்றியும்பற்றியும், ஜனவரி மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டுவதற்கான ஆயத்தப்பணிகள்  தொடர்பாகவும் வலியுறுத்தினார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரசுராமன்.

Top