logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளால் நிலத்தடி நீர் மட்டம் 1.35 மீட்டர் அதிகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளால் நிலத்தடி நீர் மட்டம் 1.35 மீட்டர் அதிகரிப்பு

08/Dec/2020 08:12:12

புதுக்கோட்டை: குடிமராமத்து மேற்கொள்ளப்பட்ட 8 குளங்கள் முழு அளவிலும் 610 குளங்கள் 50%, 3,238 குளங்கள் 25 % நீர் நிரம்பியுள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டம் 1.35 மீட்டர் அதிகரித்துள்ளதாவும்  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி மற்றும் பேரையூர்  பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் பயனாக மழைநீர் நிரம்பிய நீர் நிலைகளை 8.12.2020-இல் நேரில் பார்வையிட்டார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் ஏரி, குளம், கண்மாய்களை துர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டத்தை  தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலத்திற்கு முன்பாகவே குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் தூர் வாரி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 

நடப்பாண்டில் பொதுப்பணித்துறையின் சார்பில் 43 குளங்கள் ரூ.21.75 கோடி மதிப்பீட்டில்  துhh;வாரும் பணி, 250 கி.மீ நீளத்தில் ரூ.9.52 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணி, ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 650 குளங்கள் ரூ.14.25 கோடி மதிப்பீட்டில்  துர்வாரும் பணி என ஆக மொத்தம் நடப்பாண்டிற்கு இதுவரை ரூ.45.52 கோடி மதப்பீட்டில் பணிகள்   முடிவடைந்துள்ளது. 

நீர் மேலாண்மை திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இதன் பயனாக மாவட்டத்தில் அக்டோபர் மாதம் நிலத்தடி நீர்மட்டம் 1.35 மீ உயர்ந்துள்ளது. தற்பொழுது பரவாலாக பெய்து வரும்  மழையினால் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மேலும் மழைநீர் வடிவதற்கும் குடிமராமத்து திட்டம் உதவுகிறது.

அந்த வகையில், லெம்பலக்குடி மற்றும் பேரையூர் பகுதிகளில் ஊரக வளா;ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டப் பணிகள் நேரில் பார்வையிடப்பட்டது. தற்போது பெய்து வரும் பருவமழையால் இக்குளங்கள் நீர் நிரம்பி இருப்பது பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் பொதுப்பணித் துறையின் மூலம் தூர்வாரப்பட்ட 43 குளங்களில்  இதுவரை 8 குளங்கள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளன. இதே போன்று மாவட்டத்தில் உள்ள 3,848 சிறு பாசனக் குளங்களில் 3,238 குளங்கள் 25 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. 610 குளங்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிட குடிமராமத்துத்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது.  

 இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  எம்.சந்தோஷ்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்      ஜோஸ்பின் நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Top