logo
பொது வேலை நிறுத்தம்: ஈரோட்டில் மறியல்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து தொழிற்சங்கத்தினர் 304 பேர் கைது

பொது வேலை நிறுத்தம்: ஈரோட்டில் மறியல்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் 304 பேர் கைது

26/Nov/2020 09:47:02

ஈரோடு: மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்களை க்கண்டித்து ஈரோடு மாவட்டத்தில்  மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அனைத்து தொழில்சங்கத்தைச் சார்ந்த 304 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோரிக்கைகள்: மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்களை  திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும், வருமான வரி கட்டுமளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்,

 தேவைப்படும் அனைவருக்கும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி,கோதுமை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டத்தை) 200 நாட்களாக உயர்த்தி நகரப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அனைவருவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(நவ.26) அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி சம்மேளனங்கள் சார்பில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட வட்டத் தலைநகர்களில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நடந்த போராட்டங்களில், விவசாய சங்கங்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மின் பகிர்மான சங்கத்தினர், போக்குவரத்து கழகம் சங்கத்தினர், டாஸ்மார்க் சங்கத்தினர், வங்கி அதிகாரிகள் உட்பட பலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே  நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது. 

இந்த மறியலில் ஈடுபட்ட 75 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பவானியில் பவானி -மேட்டூர் பிரிவில் நடந்த மறியல் போராட்டத்தில்  பங்கேற்ற139 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுபோல் அந்தியூரில் மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொடக்குறிச்சி, கொடுமுடி, சத்தியமங்கலம்,கோபி போன்ற பகுதிகளில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு சில வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர். இதனால் பண பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டது.

Top