03/Nov/2020 06:50:27
ஈரோடு மாநகராட்சி பகுதி 41- ஆவது வார்டில் அன்னை நகர் உள்ளது. இங்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னால் பைப்லைன் போடுவதற்காக குழி தோண்டப்பட்டது. பின்னர் பெரும்பள்ளம் ஓடை திட்டத்திற்கு இது வருவதால் தோண்டிய சாலையை மூடி விட்டுச் சென்று விட்டனர்.
இந்நிலையில், இன்று அண்ணா நகர் அருகே உள்ள சாந்தன் கருக்கு பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக பலன் போட குழி தோண்டுவதற்காக ஜேசிபி எந்திரத்துடன் ஊழியர்கள் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அண்ணா நகர் பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. முதலில் எங்க பகுதிகளில் பைப் லைன் போட வேண்டும் இல்லை குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர். இது குறித்து பெரியார் நகர் திமுக பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இதை அடுத்து ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.