logo
திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது

திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது

20/Nov/2020 10:27:38

தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசாரப் பயணத்தை துவங்குவதற்காக, இன்று மாலை 3 மணிக்கு, திருவாரூர் வந்தடைந்தார். அங்குள்ள சந்நிதி தெருவில் இருக்கும் கலைஞர் கருணாநிதியின்  சகோதரி வீட்டில், மதிய உணவை முடித்துக்கொண்டு, கலைஞரின் தாயார் சமாதியிருக்கும் காட்டூருக்குச் சென்று வணங்கினார்.

 முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து பிராாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்றைக் காரணம் காட்டி காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

ஆனால், திமுக தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதோடு, அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விடக் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டது. இதையடுத்து,  பிரசாரத்துக்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் உதயநிதிஸ்டாலினை  வெள்ளிக்கிழமை பிற்பகலில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து, புதுக்கோட்டை, கீரமங்கலம், வேதாரண்யம், கள்ளிமேடு, செம்போடை, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Top