06/Nov/2020 06:43:15
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்இன்று முதல் வேல் யாத்திரை தமிழகம் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. அதன்படி இன்று திருத்தணியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் வேல் யாத்திரையைத் தொடங்கினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் திரண்டு உள்ளனர்.
ஏ.டி.எஸ்.பி மல்லிகா, டவுன் டிஎஸ்பி ராஜு ஆகியோர் தலைமையில் 50 -க்கும் மேற்பட்டபோலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பா.ஜ.வினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்