logo
அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் ... புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம்

அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் ... புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம்

18/Jul/2021 11:47:43

புதுக்கோட்டை, ஜூலை, 18:  அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் ... புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

 

நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படை மகளிரின் முன்னேற்றம்தான் என்பதை உணர்ந்துள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகளிரின் முன்னேற்றத்திற்கென பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.


அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்; மகளிர் கட்டணமின்றி பயணம் செய்ய உத்தரவிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இத்திட்டம் மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  கூறியதாவது:



முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றது முதல்  அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார்.  ஒரு புறம் கோவிட் தொற்றை  கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மறுபுறம் கோவிட் நிவாரணத்தொகை ரூ.4,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை உடனடி நிவாரணமாகவும் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து வழங்கப்பட்டது.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கட்டுபாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

மேலும்,  பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை ஏற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகரப் பேருந்துகளில்  தினமும் சுமார் 60,000 மகளிர் பயணிக்கின்றனர்

 புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 9 அரசுப் போக்குவரத்து பணிமனைகள் இயங்கி வருகிறது. இதில் 7 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 139 வழித்தடங்களில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்  தினமும் சுமார் 60,000 மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். 

குறிப்பாக மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையும் பேருந்தின் முகப்பில் ஒட்டப்பட்டுள்ளது. மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் செயல்படுத்தப்பட்;டுள்ள இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார் ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண திட்டப்பயனாளியான  ஆலங்குடியை சேர்ந்த மருத்துவக்கல்லூரியில் லேப்டெக்னீசியன் பயிலும்  மாணவி அனுசுயா கூறுகையில், :

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நாள்தோறும் கல்லூரிக்கு சென்று வர அரசு பேருந்தில் பயணித்து வருகிறேன். மாதம் ஒன்றுக்கு பயண சீட்டிற்கெனரூ.750 செலவாகும்.  அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய முதல்வர் எடுத்துள்ள  நடவடிக்கையால்   ஒரு மாதத்திற்கு மட்டுமே எனது பணம்; ரூ.750 சேமிக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.9,000 வரை மிச்சமாகிறது. 


புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நந்தினி கூறுகையில், நான் திருமயத்தில்  இருந்து புதுக்கோட்டையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்காக  அரசு நகரப் பேருந்தில் சென்று வருகிறேன். பேருந்து கட்டணத்திற்கு ரூ.1,000 வரை செலவாகிவிடும். இதனால் எனது  ஊதியம்  ரூ.10,000 குறிப்பிட்ட தொகை பேருந்து கட்டணத்திற்கு செலவிடும் நிலை இருந்து வந்தது. தற்பொழுது  முதல்வர் அறிவித்துள்ள சலுகையின் மூலம் எனக்கு பேருந்துக்கு செலவு செய்த தொகை ரூ.12,000 வரை   சேமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்

 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம் மகளிர் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. 

மகளிர் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வரும்  முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் நடவடிக்கைகள் நிர்வாக திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றால் அதுமிகை ஆகாது.


Top