06/Mar/2021 04:19:06
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், லெணாவிலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் (6-3-2021) சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ராக்போர்ட் இஞ்சினீயரிங்,டிவிஎஸ் அப்சனா,பாலிஹோஸ், V4U சொல்யூஷன், டீம் ஒர்க், பிஎஸ். காம்பஸ் நீடில்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் பல கட்டங்களாக நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்கள் தேவை இருந்தது. இந்த நேர்காணலில் 1500 பேர் கலந்து கொண்ட நிலையில், சுமார் 600 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், கல்லூரியின் தலைவர் ஏ.வி.எம். செல்வராஜ், துணைத் தலைவர், சோம. நடராஜன், மேலாண் இயக்குநர் ஆர். வயிரவன், செயலர் டி. தியாகராஜன், முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் ஏ.வி.எம்.எஸ். கார்த்திக், மீனாவயிரவன், கல்லூரியின் முதல்வர் கே. கணேஷ் பாபு, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜி.எஸ். செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினர் .