12/Jul/2021 05:12:17
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத்தை அமைச்சர் எஸ். ரகுபதி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
அரிமளத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் மாவட்டச்செயலர் நவாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட_அமைச்சர் எஸ்_ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை_முத்துராஜா , அரிமளம் ஒன்றிய திமுக செயலர் பொன்.ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்
இதில். அரிமளம் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களும், சமூக செயல்பாட்டாளர்களும் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்புதுக்கோட்டை மாவட்ட அனைத்து நிலை முக்கிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.