05/Jun/2021 11:13:54
ஈரோடு, ஜூன்: ஈரோடு அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.
ஈரோட்டில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தென்னரசு, செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் ரூ.2.50 லட்சத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.
பொருளாளர் ஆர்.முருகானந்தம், கவுரவ தலைவர் தேவராஜ், துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் கே.பி.சக்திவேல், ஈஸ்வரன் உட்பட பலர்பங்கேற்றனர்.
இதே போல, ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவர்
தென்னரசு, செயலாளர் முருகானந்தம் ஆகியோர், ரூ
1 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அமைச்சர்
சு.முத்துசாமியிடம்
வழங்கினர். பொருளாளர் ஆர்.நாகராஜன், துணை
தலைவர்கள் எஸ்.ஏ.ஜோதிபாசு, வி.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.