logo
ஈரோடு சோதனை சாவடிகளில்  வாகனங்கள் தணிக்கை: ஹெல்மெட் அணியாதவர்களுக்கு  போலீஸார் அபராதம் விதிப்பு

ஈரோடு சோதனை சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை: ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீஸார் அபராதம் விதிப்பு

29/Jun/2021 10:10:06

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் சோதனை சாவடிகளில்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

 தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 5 -ஆம்தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என மாவட்ட  எஸ்பி- சசிமோகன் தெரிவித்திருந்தார்.

 35 -ஆவது நாளான திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  முக கவசம் அணியாமல் வந்த 174 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 196 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 176 இருசக்கரவாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


ஒரு நாளில் மட்டும் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதம்  வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திங்கள்கிழமை முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத் தில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிக ரித்து காணப்பட்டது. இ -பாஸ் பதிவு பெற்று முறையாக வந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. 

இதேபோல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம்  விதிப்பதை தீவிரப்படுத் தியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் முக்கியமான சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலை எதற்கு வழிவகுக்கப்போகிறது எனத்தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Top