logo
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

29/Jun/2021 11:30:49

புதுக்கோட்டை, ஜூன்:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி பாராட்டு தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினர்.

பொதுமக்கள் நடந்து முடிந்த ஊராட்சி மன்றத் தேர்தலில்புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சித் மன்ற தலைவராக போட்டியிட்ட ஏவிஎம். பாபு தேர்தல் நேரத்தில் 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் உள்ள பாலன் நகர் பகுதியில் உள்ள   வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய குடிநீர் பிரச்னையை சரி செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

அதன்படி புதுக்கோட்டை 9A நத்தம் பண்ணை ஊராட்சியில் உள்ள பாலன் நகர் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து 30 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனை பாராட்டும் விதத்தில் பொது மக்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி சால்வை அணிவித்து ஊராட்சி மன்றத்தலைவர் ஏவிஎம். பாபுவுக்கு பாரட்டுக்கள் தெரிவித்தனர்.

 இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவயோக மலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

 

Top