logo
ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது

ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது

10/Nov/2020 07:13:45

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரில் வாரிசு சான்று வழங்க விவசாயி முத்துசமி என்பரிமிருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியை ஈரோடு ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்;டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் எலந்தககாடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(60) விவசாயி. இவரது தந்தை அர்த்தநாரிக்கவுண்டர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் வாரிசு சான்று வழங்க கோரி  சிறுவலூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் ஓர் ஆண்டுக்கு முன்பு விண்ணப்பித்தாராம்.   வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி முதலில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்,து  மீண்டும் 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என முத்துசாமியை நிர்பந்தப் படுத்தி மன உளைசலுக்கு  ஆளாகிக்கியுள்ளார். 

அதனை தொடர்ந்து முத்துசாமி மீண்டும் லஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள  லஞ்ச ஒழிப்பு மக்கள் இயக்கத்தை நாடியுள்ளார். அவர்களது வழிகாட்டுதலின் படி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமிக்கு ரூ.5 ஆயிரம்தருவதாக ஒப்புக்கொண்டபின் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் முத்துசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரசாயனம் தடவிய பணத்தாள்களை வழங்கினார்.  அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் திவ்யா, ஆய்வாளர் ரேகா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

                                                                               


Top