logo
ஏஐடிசிடிஇ வழங்கிய அங்கீகாரத்தை பொறியியல் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும்:  அண்ணா பல்கலை. உத்தரவு

ஏஐடிசிடிஇ வழங்கிய அங்கீகாரத்தை பொறியியல் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும்: அண்ணா பல்கலை. உத்தரவு

28/Jun/2021 05:45:44

சென்னை:  நடப்பு   கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஏஐசிடிஇ வழங்கிய அங்கீ காரத்தை உடனே சமா்ப்பிக் கவேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல் கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் மாணவா் சோ்க்கை, புதிய பாடத் தொடக்கம் ஆகியவற்றுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழு மத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பிக்கவேண்டும். உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியா் விகிதாசாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அங்கீ காரம் வழங்கும்.

அதன்படி, தமிழக கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ வழங்கும் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் தான், தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கை நடத்தப்படும். இந்நிலையில், ஏஐசிடிஇ வழங்கிய அங்கீகாரம் குறித்த மொத்த விவரங்களையும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உடனே வழங்குமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Top