28/Jun/2021 02:32:14
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை(28-6-2021) காலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தார்.
செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி
வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க
வேண்டும்.
தமிழ்நாட்டின் மக்கள்
தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர்
கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை
உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
தொழில் முடக்கம், வேலையிழப்பு. வேலையின்மை
மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம்
இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500 வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.
மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தற்சார்பு விவசாயிகள் சங்கத்
தலைவர் கி.வே.பொன்னையன், இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் மா.நாகப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி
நகரச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை
விளக்கிப் பேசினர். மு.பாரதி நன்றி கூறினார். எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட
பலர் பங்கேற்றனர்