logo
பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

12/Jun/2021 06:22:28

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

 கறம்பக்குடி துணைமின்நிலையத்தில் உயர்அழுத்த மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:

கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் 110/22 கிலோவாட், 10 எம்.வி. மின்மாற்றி  பழுதடைந்தது. இதனால், ஓிரு இடங்களில் மின்தடை உள்ளிட்ட சில மின் குறைபாடுகள் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு தடையின்றி சீரான முறையில் மின் விநியோகம் செய்யும் வகையில் உடனடியாக சம்மந்தப்பட்ட மின்வாரிய உயர் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பேசி புதிய மின்மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிதாக மின்மாற்றி நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்மாற்றியின் மூலம்  கறம்பக்குடி, குளந்திரான்பட்டு, புதுப்பட்டி, கரு.கீழத்தெரு, கரு.தெற்குத்தெரு, முக்கூட்டுப்பட்டி, பள்ளத்தான்மனை, பல்லவராயன்பத்தை, குளப்பம்பட்டி, சூரக்காடு, முள்ளங்குறிச்சி, சவேரியார்ட்டினம், திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, குரும்பிவயல் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

இதனால் வீட்டு மின் இணைப்புகள், விவசாய மின் இணைப்புகள்வர்த்தக மின் இணைப்புகள்தொழிற்சாலை மின் இணைப்புகள் உள்ளிட்டோர் பயனடைவர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வம்பன் பகுதியில் ரூ.12.75 கோடி மதிப்பீட்டிலும், கருக்காக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கூடுதல் மின்பழு இருக்கும் அனைத்து இடங்களும் கணக்கெடுக்கப்பட்டு அப்பகுதிகளில் தேவைக்கேற்ப புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆத்தங்கரை விடுதி, வௌ்ளாளவிடுதி இடையே ரூ.13 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மேம்பாலம் அமைக்க உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை ,மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Top