logo
உ.பியில் ராகுல் காந்தி கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸார்.

உ.பியில் ராகுல் காந்தி கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்.

02/Oct/2020 10:24:56

உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட   இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  மற்றும் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் வெள்ளிக்கிழமை  திரண்ட காங்கிரஸ் கட்சி   மாவட்டத்தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ தி.புஷ்பராஜ், ஏ. இப்ராஹிம்பாபு, ஆரோக்கியசாமி, ஆர். சிவகுமார், அப்பாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர்  திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

முன்னதாக காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில்,  காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் ஏ. சந்திரசேகரன், மாவட்ட, நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

                                                                               

        

Top