logo
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடல்பகுதியில் தவறி விழுந்த மீனவரை  மீட்க எம்எல்ஏ- எஸ்.டி. ராமச்சந்திரன் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடல்பகுதியில் தவறி விழுந்த மீனவரை மீட்க எம்எல்ஏ- எஸ்.டி. ராமச்சந்திரன் கோரிக்கை

27/Jun/2021 12:52:00

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடல்பகுதியில் மீன் பிடிக்கச்சென்றபோது  தவறி விழுந்த மீனவரை  மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி. ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து றந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வடக்கு புதுக்குடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின்  மகன் தினமணி என்பவர்  தனக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன் வசீகரன்சக்திவேல், மணிகண்டன் ஆகியோருடன்  மீன் பிடிக்க சென்றபோது வசீகரன் படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்து விட்டார்.

 கடலில் விழுந்த வசீகரனை   தினமணி மற்றும் மணிகண்டன் ஆகியோர் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவருகிறது.  இச்சம்பவம் குறித்து மீமிசல் கடற்கரை  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் காணமல் போன வசீகரனை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அறந்தாங்கி சார்- ஆட்சியர் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் விரைந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

காணமல் போன மீனவர் வசீகரனை கண்டுபிடித்துத்தர  மீனவர் நலத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும்  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Top