logo
முன்கள பணியாளர்களுக்கு  மொடக்குறிச்சி எம்எல்ஏ -சரஸ்வதி நிவாரண உதவி வழங்கல்

முன்கள பணியாளர்களுக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ -சரஸ்வதி நிவாரண உதவி வழங்கல்

20/Jun/2021 03:10:05

ஈரோடு ஜூன்: முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை மொடக்குறிச்சி  எம்எல்ஏ- சரஸ்வதி  வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் முன்கள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி உட்பட்ட அனைத்து பேரூராட்சி மற்றும் சுற்று ஊராட்சிகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி கே சரஸ்வதி தனது சொந்த செலவில் அவர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, அரச்சலூர், வடுகபட்டி, கொல்லன் கோவில், சிவகிரி ஆகிய பேரூராட்சிகளில் பணியாற்றி வரும்  முன்கள பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் அரிசி மற்றும் மளிகை பொருட்களை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் துணைத் தலைவர் கலைச்செல்வன், தி மு மொடக்குறிச்சி ஒன்றிய சேர்மன் கணபதி, ஒன்றிய செயலாளர் கதிர்வேல், கொடுமுடி ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Top