18/Jun/2021 05:05:44
ஈரோடு, ஜூன்: தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஈரோட்டில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில்
அதிகளவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும்
உயிரிழந்துள்ள நிலையில்
வடமாநிலங்களில் மருத்துவர்கள்
மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை
கண்டிக்கும் வகையில் இந்திய அளவில் மருத்துவர்கள் கருப்பு
பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்களை பாதுகாக்கும் மருந்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தேசிய அளவில் நடைமுறைபடுத்த வேண்டும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி
மருத்துவர்கள் முழக்கமிட்டனர்.
இதில், டாக்டர் சுகுமார், பொருளாளர்
டாக்டர் சுதாகர், செயலாளர் செந்தில்வேல் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.