01/Oct/2020 04:00:45
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீமத் வையாபுரி சுவாமி சமாதி மடத்தில் இன்று(அக்.1) பௌர்ணமி குரு பூஜை நடைபெற்றது.
பௌர்ணமி குருபூஜையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகேஸ்வரபூஜையும் தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் பூஜைகளில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதரங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்வில் திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.