16/Jun/2021 10:09:31
கரூர், ஜூன்: கரூர் ஆட்சித்தலைவராக டாக்டர்.த.பிரபுசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்றார்.கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடையே ஆட்சியர் மேலும். கூறியதாவது: கரூர் மாவட்டத்தின் ஆட்சியராக (16.6.2021) பொறுப்பேற் றுள்ளேன். தமிழக
முதலமைச்சர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சித்தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
துாங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிரனால் பவர்க்கு - வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப நிர்வாகத்தை செம்மையான முறையில் கரூர் மாவட்ட மக்களுக்கு வழ்ங்குவதையே எனது தலையாய கடமையாக எனது செயல்பாடுகள் இருக்கும்.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சீரிய முறையில் தீர்ப்பதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் நிலை உருவாக்கப்படும். மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தில் நான் செயல்படுவேன்.
ஒருங்கிணைத்துஅனைத்து தரப்பு மக்களுக்கும் மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தியும், மாவட்டத்தின் வேளாண்மை, தொழில்துறை, சுகாதாரத்துறை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்துவதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தனிக்கவனம் செலுத்தப்படும். மேலும், மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்
கொரோனா இரண்டாவது அலை முதல்வரின் போர்க்கால நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல கரூர் மாவட்டமும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.
இனி கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பதே தற்போது என்னுடைய தலையாய பணியாக இருக்கும்.
இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக, தெரிவிக்க விரும்புவது
என்னவென்றால், அனைவரும்
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து,
கொரோனா தொற்று தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் கடைபிடித்தால்
கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர்
மாவட்டத்தை உருவாக்கலாம் என்றார் ஆட்சியர் பிரபுசங்கர்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட அலுவலர் எம்.லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்..