logo
பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில்  வந்த   2 ஆயிரம்  டன்  நெல்  மூட்டைகள்

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்

23/Nov/2020 11:45:02

ஈரோடு: ரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வெளி மாவட்டங்களிலிருந்து கோதுமை, நெல் மூட்டை, சர்க்கரை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி இன்று தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்காக 52 சரக்கு  ரயில் பெட்டியில் ஈரோடு மாவட்டத்திற்கு 2 ஆயிரம்  டன் நெல் மூட்டைகள் வந்தது.

ஈரோடு ரயில் பணிமனைக்கு வந்த நெல் மூட்டைகளை அங்கிருந்த நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் அரசு குடோன்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. பின்னர் அவை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

Top