logo
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஊசிபோடும் பணி நிறுத்தம்:பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஊசிபோடும் பணி நிறுத்தம்:பொதுமக்கள் ஏமாற்றம்

15/Jun/2021 07:33:35

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் மீண்டும்  ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக   கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய   இரண்டு தடுப்பூசிகள் முதலில் 100 மையங்களிலும், தனியார் மருத்துவமனையிலும் போடப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாவட்டத்தில் 2-ஆம் அலை தாக்கம் காரணமாக பாதிப்பு அதிக அளவில் இருந்து வந்தது. இதையடுத்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்ததுமாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால்  7 நாட்களாக  மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை.


ந்நிலையில் 13,400 கோவிஷில்டு தடுப்பூசி வந்ததை அடுத்து ஞாயிறு, திங்கள் கிழமைகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. அதிகாலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர்ஒரு மையத்திற்கு 200 பேர் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் போட பட்டு வந்தது. சில மையங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்  போலீஸ் பாதுகாப்புடன் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் செவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து அந்தந்த தடுப்பூசி போடப்படும் மையங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

இது பற்றி தெரியாததால் இன்று அதிகாலையில் வழக்கம்போல் மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். பின்னர் அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டம் என்ற முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் அதிக அளவு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top