26/May/2021 08:45:50
புதுக்கோட்டை, மே: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையின் கீழ் வரப்பெறும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து, தகுதியுள்ள மனுதாரா;களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழக அரசால் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட் டுள்ளது.
இத்துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இணையவழி (CM HELPLINE PORTAL - UTM) மூலமாக வரப்பெற்ற மனுக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு கோவிட்-19 சூழலை கருத்தில் கொண்டு, முன்களப்பணியா ளர்கள் மூலம் அவர்களது இல்லத்திற்கு சென்று உரிய உத்தரவுகளை வழங்கிட புதுக்கோட் டை மாவட்ட ஆட்சியரால் அனைத்துத்றை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது