14/Jun/2021 09:50:05
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: நாளுக்கு நாள் பெருகி வரும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால், கட்டிட பணிகளை தொடர முடியாமல், கட்டுமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய,
மாநில அரசுகள் உடனடியாக தனி கவனம் செலுத்தி, கட்டுமான பொருட்களின்
விலையை குறைக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும். கொரோனா
பாதிப்பினால் வேலை வாய்ப்பின்றி, வருமானமும் இன்றி, பல லட்சம் தொழிலாளர்கள் இன்றைக்கு வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு பெரிதும் உதவும் வகையில் இந்த கட்டுமான தொழில்
இருந்து வந்தது.
எனவே, விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள கட்டுமான தொழிலை மேம்படுத்த, இமயமலைப் போல் உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.