logo
கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத்தினருடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத்தினருடன் முதல்வர் ஆலோசனை

17/May/2021 11:08:30

சென்னை, மே: தமிழகத்தில்  கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனைக்கூட்டம்   முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்திலுல்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (16-5-2021 நடைபெற்ற லோசனைக் கூட்டத்தில் முதல்வர்  மு.. ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில்கொரோனா நோய்த் தொற்று

நடவடிக்கையில், முன்களப் பணியாளர்களாக விளங்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்துஒத்துழைப்பை நல்க வேண்டுமெனவும், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனாவைக் கட்டுப்படுத்த  தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் 

 அவற்றில் முக்கியமாக, உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்கவிருப்பதாகவும்  நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப் படை விமானங்கள் வாயிலாக திரவ ஆக்சிஜன்

கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு  வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கிக் கூறினார்

 கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பாக  ஈடுபட்டாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனத்தெரிவித்தார்

எனவே, அந்த வகையில், மக்களின் நன்மைக்காக, மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை, முயற்சிகளை  ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட  வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட முதல்வர் அவர்கள், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை  தங்களது ஊடகங்கள் மூலம்

வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.பின்னர், வருகை புரிந்திருந்த ஊடகவியலாளர்களின் கருத்துகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

 ஊடகவியலாளர்கள் சார்பில் பத்திரிகை ஊடகத்துறையினரை முன்களப்பணியாளர்களாக அறிவித்துள்ள நிலையில், இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதற்கான தெளிவான அரசாணை வெளி்யிட வேண்டுமெனவும். ஊடகங்களில் பணியாற்றும் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், காட்சித்தொகுப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர், செய்தி வாசிப்பவர்கள் உள்பட அனைவரையும் முன் களப்பணியாளர்களாக சேர்க்க வேண்டுமெனவும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர்.

 தலைமைச் செயலாளர்  வெ. இறையன்பு வரவேற்றுப் பேசினார்செய்தித் துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன்  நன்றி கூறினார்.இக்கூட்டத்தில், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை மற்றும்  தமிழகத்திலுள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.   

                                                  

        

Top