17/May/2021 11:08:30
சென்னை, மே: தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்திலுல்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள
கூட்ட அரங்கில்
(16-5-2021 நடைபெற்ற லோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று
பேசுகையில்,
கொரோனா நோய்த் தொற்று
நடவடிக்கையில், முன்களப் பணியாளர்களாக விளங்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, ஒத்துழைப்பை நல்க வேண்டுமெனவும், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும்
கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கிக் கூறினார்
எனவே, அந்த வகையில், மக்களின் நன்மைக்காக, மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை, முயற்சிகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை
வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட முதல்வர் அவர்கள், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தங்களது ஊடகங்கள் மூலம்
வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.பின்னர், வருகை புரிந்திருந்த ஊடகவியலாளர்களின் கருத்துகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.