13/Jun/2021 11:21:19
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.
புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கோவிட் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கினர். பின்னர் திருவள்ளுவர் நகர் 38 -ஆவது வார்டு மற்றும் திருவப்பூரில் 24 -ஆவது வார்டுகளில் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் க.நைனா முகமது, அரு. வீரமணி, எம்.எம்.பாலு, ஆ.செந்தில், சுப. சரவணன், அசோக்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.