logo
பாபர் மசூதி இடிப்பு நாள்: ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு நாள்: ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

06/Dec/2020 08:33:30

ஈரோடு, டிச: பாபர் மசூதி இடிப்பு தின்தையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே எஸ்.டி.பி.ஐ.(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில பேச்சாளர் கோவை காதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில், வழிபாட்டு தளங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். 

பாபர் மசூதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும். பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றவாளிகளுக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் முகமது அகில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் முனாப், பொருளாளர் அசன் பாபு, மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவர் கண. குறிஞ்சி, திராவிட விடுதலை கழக அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, நீரோடை அமைப்பு தலைவர் நிலவன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top