13/Jun/2021 03:09:05
ஈரோடு, ஜூன்: மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மூடபட்டிருந்த தமிழக அரசின் மதுபான கடைகள் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு பெரியார் நகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தின்
போது டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளானோர்
கலந்து கொண்டனர்.
பின்னர் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி
செய்தியாளர்களிடம் கூறுயதாவது:
கொரோனோ காலத்தில் நெருக்கடியில சிக்கித்தவிக்கும் மக்களை மதுக்கடைகளை திறந்து மேலும் பொருளாதார நெருக்கடியை தமிழக அரசு திணிக்கிறது என்றார்.மதுவுக்கு
அடிமையானர்வர்களை போதை
நீக்கும் மையத்தை உருவாக்கி தமிழக அரசு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.