11/Jun/2021 06:39:13
திருச்சி, ஜூன்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சி பிரஸ் கிளப் சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த முதல்வர் மு,க.ஸ்டாலினை நேரில் சந்தித்த திருச்சி பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் (திருச்சி பிரஸ் கிளப்), பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததற்கும், கொரோனா உதவித் தொகையாக ரூ5,000 வழங்குவதற்கும் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து ரூ.1 லட்சம் நிதியை முதல்வரிடம் பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில்,
திருச்சி பத்திரிகையாளர் மன்ற (திருச்சி பிரஸ் கிளப்) தலைவர் க.சந்திர சேகர், செயலாளர் ஜோ.மகேஸ்வரன், பொருளாளர் கு.வைத்திலிங்கம், நிர்வாகிகள் இரா.ரமேஷ் , அ.வேலுச்சாமி, உறுப்பினர்கள் எஸ். ஜெய்சங்கர், ஆர்.ராஜசேகர், ஆர். ரமேஷ், கே.ரங்கநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
முழுக்க, முழுக்க சங்க உறுப்பினர்களின் சந்தா தொகையில் இருந்து, முதல்வரின் கொரோ னா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கிய சங்க உறுப்பினர்கள் அனை வருக்கும் நன்றி பாராட்டுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.