logo
தனியார்மயமாக்கலைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தனியார்மயமாக்கலைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

01/Jan/2021 12:20:57

புதுக்கோட்டை, டிச: மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, டி.சந்தானம், கே.ரெத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். ஏழைகள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை மாதத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, உழைக்கும் மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Top