11/Jun/2021 09:23:23
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டைய மாவட்ட வர்த்தகர் கழகம் சார்பில் எச்ஐவி தொற்றாளர்கள் மற்றும் விழியிழந்தோர் குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை வர்த்தகர் கழகம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வர்த்தக சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்க கௌரவ தலைவர் சீனு சின்னப்பா பங்கேற்று, கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 25 எச்ஐவி தொற்றாளார் குடும்பங்களுக்கும் , 25 மாற்றுத்தினாளிகள் (பார்வையற்றோர்) குடும்பத்தினருக்கும் நிவாரண உதவியாக தலா 10 கிலோ அரிசி பைகளை வழங்கினார்.
எச்ஐவி தொற்றாளர்கள் சார்பில் , ஹெச்ஐவி உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் கே.எம். ராமசாமி பெற்றுக்கொண்டார். இதில், மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் எஸ்.சவரிமுத்து, மரம் நண்பர்கள் நிர்வாகி பேராசிரியர் சா.விஸ்வநாதன், பழனியப்பா கண்ணன், பொறியாளர் ரியாஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.