logo
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்: ஈரோடு மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதியில் சுவரொட்டி

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்: ஈரோடு மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதியில் சுவரொட்டி

13/Apr/2021 06:58:01

ஈரோடு, ஏப்: ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடை வணிக நிறுவனங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் ஒட்டப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா  தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள் ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றா த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடை வணிக நிறுவனங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த  சுவரொட்டிகளை  மாநகராட்சி பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒட்டினர். 

அதில் கூறியிருப்பதாவது:  கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களும், விற்பனையாளர் காசாளர், வரவேற்பாளர், கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கை யாளர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். கடையின் நுழைவு பகுதியில் சானிடைசர் ,சோப்பு திரவம் தண்ணீர், சோப்புத் தண்ணீர் போன்று ஏதாவது ஒன்று கண்டிப்பாக வைத்து கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே அனுமதிக்க வேண்டும். 


கடையின் உட்புறமோ  அல்லது வெளியிலோ கூட்டம் சேர அனுமதிக்க கூடாது. கடையின் அளவிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களை 6 அடி தூர  சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்க வேண்டும். டீ ,காபி, குளிர்பானங்கள் கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பேப்பர் டம்ளரில் மட்டுமே வழங்க வேண்டும்.சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர்களை  பயன்படுத்தக் கூடாது. 

பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் போது கண்டிப்பாக கையுறை  அணிந்திருக்க வேண்டும். மேல் குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு உடனடியாக ரூ 500 முதல்ரூ.5 ஆயிரம்  வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் கொரோனா வழிமுறை களை பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top