logo
கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்:ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ-.தென்னரசு வழங்கல்

கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்:ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ-.தென்னரசு வழங்கல்

10/Jun/2021 02:50:30

ஈரோடு, ஜுன்: ஈரோட்டில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை முன்னாள் எம்.எல்.  கே.எஸ்.தென்னரசு வழங்கினார்

 கொரோனா ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு .தி.மு.. முன்னாள் எம்.எல்.-க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் தங்கள் சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகஈரோடு ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   மாவட்டத்தில் உள்ள கோவில்  அர்ச்சகர்கள் பணியாளர்கள் 65 பேருக்கு முன்னாள் எம்.எல்.-க்கள் கே. வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு, மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி  ஆகியோர் இணைந்து  ரூ.45 ஆயிரம் மதிப்பில்  மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில்பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top