logo
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

25/Dec/2020 07:10:00

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் கட்சி நிர்வாகி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.இதில், கட்சி நிர்வாகிகள், ராஜாராம், முரளிதரன், இளமதி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Top