28/Mar/2021 07:36:48
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி கரம்பக்குடி ஒன்றிய துவார், கொல்லம்பட்டி,உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கொல்லம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் பொது மக்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார் மேலும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்ததை எடுத்துக் கூறியும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள், வாஷிங் மிஷின், சோலார் அடுப்பு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எடுத்துக்கூறி பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.