logo
ஈரோட்டில் தொடரும் தொற்று காரணமாக மளிகை கடைகள்  மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என வியாபாரிகள் அறிவிப்பு

ஈரோட்டில் தொடரும் தொற்று காரணமாக மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என வியாபாரிகள் அறிவிப்பு

09/Jun/2021 08:02:50

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் தொடரும் தொற்று காரணமாக மளிகை கடைகள்  மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வந்தது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல் படுத்தி அவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையான மளிகை காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட முதலில்  அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் தொற்றின்  மேகம் அதிகரித்ததன் காரணமாக காய்கறி மளிகை கடை செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் வரும் 14-ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை ,காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 145 -க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மளிகைக் கடைகளின  நேரத்தை குறைத்து இயக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் சார்பில் இன்று முதல் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த சங்கங்களில் கீழ் மொத்தம் 20,000 மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், கோபி போன்ற பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. தொற்றின்  தாக்கம் காரணமாக வியாபாரிகள் தாமாகவே முன்வந்து மளிகை கடை நேரத்தை குறைத்து உள்ளனர்.

 இதேபோல் அதேபோல்  மாநகர் பகுதியில் உள்ள 2250 மளிகைக் கடைகள் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை  மட்டுமே திறந்திருந்தது. 1 மணிக்கு பிறகு அனைத்து மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு எஸ்.பி. சசி மோகனிடம்  அனுமதி கடிதம் அளித்து உள்ளனர்

பொது மக்கள் நலனுக்காகவும், வியாபாரிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பொது மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

Top