logo
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூன்று அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூன்று அமைச்சர்கள் ஆய்வு

08/Jun/2021 06:31:30

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,   வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.

 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில்   நடைபெற்றது

இந்த கூட்டத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,   வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.


ஆய்வு கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

முன்னதாக  திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள் கனி மார்க்கெட் பகுதியில் புதியதாக கட்டப்படும் கட்டிடப்பணிகளையும் பார்வையிட்டனர்.

Top