07/Jun/2021 10:28:39
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம், மருந்தாளுநர்கள் சங்கம் சமூக ஆர்வலர்கள் இணைந்து காந்தி நகர் பகுதி மக்களுக்கு கப சூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
புதுக்கோட்டை சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் வழிகாட்டுதல்படி, காந்தி நகர் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியை கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் பங்கேற்று கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கபசூர கசாயம், முகக்கவசம் மற்றும், ஆவிபிடித்தல் கேப்சூல்கள்,வைட்டமின் மாத்திரைகள்,பொது மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
இதில், சிறப்பழைப்பாளர்களாக குழந்தைகள் நல மூத்த மருத்துவர் எஸ்.ராமதாஸ், வழக்குரைஞர் நாகமுத்து, பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சரவணன், திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடி, மற்றும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, பொருளாளர் பாண்டிசெல்வி.
மருந்தாளுநர்கள் சங்கமாநிலத் தலைவர் கார்த்திக், நகர் மன்ற உறுப்பினர் மணிவேலன், சமூக ஆர்வலர் ஆர்சிஎம். தினேஷ், காந்தி நகர் கிளை செயலாளர் கணேசன், தனபால், ஜெகா, காமராஜபுரம் கிளை செயலாளர் பாண்டியன், செல்வராஜ், மற்றும் காந்தி நகர் இளைஞர்கள் பாதுகாப்பான முறையில் கலந்து கொண்டனர்.