27/Jun/2021 12:37:54
புதுக்கோட்டை, ஜூன்: சங்கஉறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட நான்கு சக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்ட சங்க கௌரவத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜா தலைமையில் நடைபெற்ற கொரோனா பேரிடர் கால ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு தண்ணீர் பந்தல் அமைத்தது தொடர்பாக
சங்கப்பொருளாளர் சி.
சரவணம் சமர்ப்பித்த வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல்
அளிப்பது, சங்க உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் தங்கள் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள
வைக்க வேண்டும் ,
சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது,சந்தா தொகையை முடிவு செய்யப்பட்டு பத்து நாளில செலுத்துவது, பிரதி மாதம் முதல் தேதி சங்க கூட்டம் நடத்துவது. சங்கப் பொறுப்பாளர்கள் அவசியம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திப்பது, நலவாரியத்தில் சங்க உறுப்பினர்களை பதிவு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவர் வி.ஏ.ராஜா வரவேற்றார். சங்கச் செயலாளர் க.வினோத்குமார் நன்றி
கூறினார். அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் அணிந்து சமூக
இடைவெளியை கடைப்பிடித்து இந்தக்கூட்டம் நடத்தப்பட்டது