logo
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

13/Feb/2021 03:23:43

புதுக்கோட்டை, பிப்:  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே மாவட்ட செயலாளர் சகாய அருள்சாமி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎஸ் என்னும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி அனைத்திலும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Top